மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மா விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அணியில் தொடர்கிறார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று, அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) நேற்று தேர்வு செய்து அறிவித்துள்ளது.
0 கருத்துகள்