
பெங்களூரு: தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய ‘ஏ’ அணி 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா ‘ஏ’ - தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான 4 நாட்கள் கொண்ட முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மைய மைதானத்தில் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா ‘ஏ’ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 85.2 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்திருந்தது.

0 கருத்துகள்