நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்றன. 11 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை காரணம் காட்டி சிபிஎஸ்இ 10, மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்தன.
இதுகுறித்து பிரதமர் மோடி, கல்வித்துறை அதிகாரிகள், அரசியல் கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து மே 4 முதல் ஜூன் 14 வரை நடக்கவிருந்த சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், மே 4 ஆம் தேதி தொடங்க இருந்த 12-ஆம் வகுப்பு தேர்வு தேதி குறிப்பிடமால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 1 ஆம் தேதி கொரோனா சூழல் குறித்து ஆய்வு நடத்தி பின்னர் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்