Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தடுப்பூசிகளை முன்கூட்டியே கேட்டுப் பெற வேண்டும் - மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனா தடுப்பூசிகளை மாநிலங்கள் முன்கூட்டியே கேட்டுப் பெற வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அறிவுறுத்தியுள்ளார்.

அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், சுகாதாரத்துறை செயலாளர், ஐசிஎம்ஆர், நிதி ஆயோக் தலைவர்கள் ஆகியோருடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆலோசனை நடத்தினார். அப்போது, படுக்கை வசதி குறைவு மற்றும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன் பின்னர் பேசிய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கொரோனா தடுப்பூசிகளை மாநிலங்கள் முன்கூட்டியே கேட்டுப் பெற வேண்டும் என்று அறிவுறுத்தினார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்