Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மேற்கு வங்க தேர்தல்: பரப்புரை தடையை எதிர்த்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் https://ift.tt/3smsxBf

மேற்கு வங்க தேர்தல் பரப்புரையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மம்தா பானர்ஜி இன்று ஒருநாள் பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. இதை எதிர்த்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நான்கு கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இன்னும் 4 கட்ட தேர்தல் மீதமுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மம்தா பானர்ஜி, இன்று இரவு எட்டு மணிவரை பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. இதை எதிர்த்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மம்தா பானர்ஜி அறிவித்து இருந்தார் அதைத் தொடர்ந்து கொல்கத்தா காந்தி சிலை முன் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்