Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அரக்கோணம் இரட்டைக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய விசிகவினர் மீது வழக்குப் பதிவு https://ift.tt/3uEFaZD

அரக்கோணம் இரட்டைக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய விசிகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அரக்கோணம் இரட்டைக்கொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக படுகொலைகளை செய்தவர்களை உடனடியாக கைதுசெய்து குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்தவேண்டும், உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து விசிகவினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிரவன் உள்ளிட்ட 79 பேர் மீது தல்லாகுளம் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

image

முன்னதாக, அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோகனூரில் சிலர் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் அர்ஜூனன், சூர்யா ஆகிய 2 தலித் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்தச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து விரிவாக தெரிந்துகொள்ள >> அரக்கோணத்தில் இரட்டைக்கொலை: 6 பேர் கைது; உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உறுதி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்