Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கோடை மழை! https://ift.tt/3xa5Un8

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக கோடை மழை பெய்தது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் இரவில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. தற்போது சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் விவசாயிகள் கூறுகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் அண்மைக்காலமாக வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று மாலை முதல் மழை பொழிந்தது. அங்கு கனமழை தெடர்ந்ததால் இரவில் பல்வேறு இடங்களில் மின்இனைப்பு துண்டிக்கப்பட்டது.

image

ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இரண்டாவது நாளாக மழை நீடித்தது. மூன்று மணிநேரம் கனமழை கொட்டியதால் சாலைகள், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சாத்தூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய இடி மின்னலுடன் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் மழைநீரில் பள்ளம் மேடு தெரியாத காரணத்தால் பெரிதும் அவதியுற்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்