தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் 1,212 செவிலியர்கள் நிரந்தரப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
1,212 செவிலியர்களுக்கான ஒப்பந்தம் நாளையுடன் முடியவிருந்த நிலையில் தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணி நிரந்தரம் செய்யப்பட்டதால் 1,212 செவிலியர்களுக்கான மாத ஊதியம் ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.40 ஆயிரமாக அதிகரிக்கும். 2015-2016 இல் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சிப் பெற்று பதிவு செய்தவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. 10-ம் தேதிக்கு முன்னதாக 1,212 செவிலியர்களும் சென்னையில் பணியில் சேர வேண்டும் என்றும் பின்னர் 1,212 பேரும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்