தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28,978 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் 232 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் ஒரே நாளில் 7,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,52,389 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்து இதுவரை 12,40,968 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் அல்லாத 58 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்குட்பட்ட 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்