3-ஆவது முறையாக மேற்குவங்க முதலமைச்சராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்கவுள்ளார்.
மேற்குவங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து மூன்றாவது முறையாக அம்மாநிலத்தின் முதலமைச்சராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்கிறார்.
இதற்கிடையே, புதிய அமைச்சரவை பொறுப்பேற்கும் வகையில், ஆளுநர் ஜெகதீஷ் தன்கரை சந்தித்து, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்திருக்கும் நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவரை சட்டமன்றக் குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்