Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தமிழகத்தில் ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 311 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 16,6812 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அதில் 33,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் 6,247 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவால் அரசு மருத்துவமனைகளில் 163 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 148 பேரும் என 311 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 17,670 ஆக உயர்ந்துள்ளது. இதில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த வந்த இணைநோய் இல்லாத 84 பேர் உயிரிழந்திருப்பது கவனிக்கத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 2,19,342 ஆக அதிகரித்துள்ளது.கொரோனாவில் இருந்து இன்று 2,13,17 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 13,61,204 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்