Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யும் 'கோவிசெல்ஃப்' கருவியை எப்படி பயன்படுத்துவது?

வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 'கோவிசெல்ஃப்' கருவியை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம். 

வீட்டுத்  தனிமையில் இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்,  வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 'கோவிசெல்ஃப்' என்று பெயரிடப்பட்டுள்ள ரேபிட் ஆன்டிஜென் டெஸ்டிங் கருவியின் பயன்பாட்டுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த ஒரு கருவியின் விலை 250 ரூபாய்.  இந்த 'கோவிசெல்ஃப்' கருவியை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம். 

image
* மூக்கில் உள்ள சளி மாதிரியை எடுத்து சுய பரிசோதனை மூலம் தொற்று இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
* பரிசோதனை செய்வதற்கு முன் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து 'கோவிசெல்ஃப்' அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பின்னர் பெயர், வயது, முகவரி, அடையாள அட்டை எண் உள்ளிட்ட விபரங்களை நிரப்பிட வேண்டும். 
*  'கோவிசெல்ஃப்'  செயலியில் விவரிக்கப்பட்டுள்ள நடைமுறைக்கு ஏற்ப மூக்கில் உள்ள சளி மாதிரியை எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும். கர்ப்பத்தை தெரிந்து கொள்ள பயன்படுத்தும் ஹோம் டெஸ்ட் கிட் அடிப்படையிலான இந்த கருவியினை பயன்படுத்தி 2 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை செய்துவிடலாம். 15 நிமிடங்களில் பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் முடிவு ஆப்பிலேயே காட்டும்.  

* பரிசோதனை முடிவுகள், தரவுகள் அனைத்தும் ஐ.சி.எம்.ஆரின் பரிசோதனை தளத்துடன் இணைக்கப்பட்ட மையப்படுத்தப்பட்ட பாதுகாப்பான ‘சர்வரில்’ சேமிக்கப்படும்.
* 'கோவிசெல்ஃப்' கருவியின் மூலம் ஒருவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தால் அது உறுதியாக பாசிட்டிவ் என்றே கருதப்படும்; மீண்டும் பரிசோதனை தேவையில்லை. ஆனால் தொற்று அறிகுறிகள் இருந்து இந்த கருவி மூலம் சோதனை செய்து அதில் நெகட்டிவ் என, வந்தால் தற்போது வழக்கமாக செய்யப்படும் ஆர்டிபிசிஆர் சோதனையை மேற்கொள்ள வேண்டும்.
* 'கோவிசெல்ஃப்' கருவியின் பரிசோதனையை எல்லோரும் கண்மூடித்தனமாக பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டோருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் மட்டும் இக்கருவியை பயன்படுத்தலாம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்