தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் விட்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றிருக்கும் திமுக, புதிய ஆட்சியை அமைத்துள்ளது. இதையடுத்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து 33 அமைச்சர்களும் ஒருவர்பின் ஒருவராக தங்கள் பதவியை ஏற்றுக்கொண்டனர். இந்த விழாவில் மிகக் குறைந்த அளவிலேயே விருந்தினர்கள் அழைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தார் கலந்து கொண்டனர். அப்போது 'ஸ்டாலின் முத்துவேல் கருணாநிதி எனும் நான்' என்று கூறி மு.க்.ஸ்டாலின் முதலமைச்சருக்கான பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் எடுத்துக்கொண்டார். ஸ்டாலின் உறுதிமொழியை ஏற்ற போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்தக் கண்ணீர் விட்டார். யாரும் கவனிக்காவண்ணம் அவர் கண்களை துடைத்துக் கொண்டார்.
விழாவில் கலந்து கொண்ட திமுக இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏவும் ஆன உதயநிதி ஸ்டாலினும் ஸ்டாலின் பதவியேற்பின் போது கண்கலங்கினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்