Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஐபிஎல் தொடரில் பங்கேற்ற பிறகு மாலத்தீவில் தங்கியிருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் தாயகம் திரும்பினர்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணணையாளர்கள் என 38 பேர் அடங்கிய குழுவினர் நேற்று மாலத்தீவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தாயகம் சென்ற டைந்தனர்.

கரேனா வைரஸ் பரவல் காரணமாக ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தத் தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணணையாளர்கள் என 38 பேர் தாயகம் திரும்புவதில் சிக்கல் எழுந்தது. ஏனெனில் இந்தியாவில் வைரஸ் தொற்று அதிகமாக இருப்பதால் இங்கிருந்து ஆஸ் திரேலியாவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்