Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சென்னை: அம்மா உணவகத்தை சூறையாடிய மர்ம நபர்கள்... வைரலாகும் வீடியோ - போலீசார் விசாரணை

சென்னையில் அம்மா உணவகத்தை சூறையாடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை முகப்பேர் 10-வது பிளாக்கில் உள்ள அம்மா உணவகத்திற்குள் இன்று காலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்த அம்மா உணவகம் பெயர் பலகைகள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள் உள்ளிட்டவற்றை கிழித்து வீதியில் எறிந்தனர்.

image

அத்துடன் உணவகத்தில் இருந்து உணவுப் பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பெண் ஊழியர்கள் வெளியே ஓடி வந்தனர்.

image

தகவல் அறிந்து ஜெஜெ நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

image

அந்த வீடியோவில் ஒரு நபர் திமுக துண்டை தோளில் அணிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்.”  என்று குறிப்பிட்டு அத்துடன் கிழிக்கப்பட்ட பெயர் பலகைகளை மீண்டும் ஒட்டப்படும்  வீடியோவையும் இணைத்துள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்