தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 24ஆம் தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 16 வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அவையை தொடக்கிவைத்து பேசிய ஆளுநர் தமிழக அரசின் பல்வேறு முக்கிய அம்சங்களையும் திட்டங்களையும் விவரித்தார்.
அதன்பிறகு, சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், கூட்டத்தொடர் 24ஆம் தேதிவரை நடைபெறும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நாளை தொடங்குகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது 24ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பதில் உரையாற்றுகிறார் .
இதற்கிடையே, கொரோனா பரவலை கட்டுப்படுத்த திமுக தலைமையிலான அரசு தவறிவிட்டது என்றும், ஆளுநரின் உரை பெருத்த ஏமாற்றம் அளிப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்