Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

விரைவுச் செய்திகள்: கருணாநிதி பிறந்தநாள் | +2 பொதுத்தேர்வு | ஏமாற்றும் வாட்ஸ்அப்?

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98வது பிறந்தநாளை ஒட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மேலும் மாநிலம் முழுவதும் 38 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

எதிர்ப்பவர்களும் பாராட்டும் அரசு: திமுகவுக்கு வாக்களிக்காதவர்களும் பாராட்டும் வகையில் அரசு தொடர்ந்து செயல்படும் என மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

தேவேந்திர குல வேளாளர் என சான்று வழங்க உத்தரவு: தமிழகத்தில் 6 சாதிப்பிரிவினருக்கு தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் சான்றிதழ் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒரே நாளில் 2.11 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்: இந்தியாவில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 11ஆயிரம் பேர் குணமடைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

குத்தகைக்கு விடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு: செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை உடனே தொடங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரியும் அந்நிறுவனத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்க உத்தரவிடக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.2000, 14 மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம்: கொரோனா நிவாரணத்திற்கு இரண்டாம் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். நியாய விலைக்கடைகளில் 14 பொருட்கள் தொகுப்பு மற்றும் அர்ச்சகர்களுக்கு 4 ஆயிரம் வழங்கும் திட்டமும் தொடங்கப்படுகிறது.

+2 பொதுத்தேர்வு நடக்குமா? ரத்தாகுமா?: தமிழகத்தில் +2 பொதுத்தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? என கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டு தமிழ்நாடு அரசு விரைவில் முடிவெடுக்கவுள்ளது.

சபாநாயகர் பதவிக்கு பாஜக போட்டி: புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் பதவிக்கு என்.ஆர். காங்கிரஸ் ஆதரவுடன் பாரதிய ஜனதா போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். அமைச்சரவை பங்கீடு உடன்பாடு குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

தடுப்பூசிக்கு ரூ.35,000 கோடி - விவரம் தர உத்தரவு: தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட 35,000 கோடி ரூபாய் செலவிடப்பட்ட விவரம் என்ன? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பயனாளர்களை ஏமாற்றும் வாட்ஸ்அப்: புதிய தனியுரிமைக் கொள்கைக்கு பயனாளர்களை ஏமாற்றி வாட்ஸ்அப் ஒப்புதல் பெறுகிறது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

மல்லையாவின் சொத்துகள் வங்கிகளுக்கு சொந்தம்: இங்கிலாந்துக்கு தப்பியோடிய விஜய் மல்லையாவின் 5 ஆயிரத்து 600 கோடி சொத்துகள் கடன் கொடுத்த வங்கிகளுக்கு சொந்தம் என மும்பை பண மோசடி தடுப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்