Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“+2 தேர்வு முடிவில் முதலமைச்சருக்கு நூற்றுக்கு நூறு” - முதல்வருக்கு வைரமுத்து பாராட்டு

+2 தேர்வை ரத்துசெய்த முதல்வருக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது, “

+2 பொதுத் தேர்வு என்றஉளவியல் போரிலிருந்து
மாணவ சமுதாயத்தை விடுவித்த
தமிழக அரசைப் பாராட்டுகிறேன்.

உயர்கல்வியா உயிரா
என்ற வினாவை முன்வைத்து
உயிரே என்று முடிவெடுத்ததில்
மாணவர்களின் பதற்றம் தணிந்தது.

+2 தேர்வு முடிவில்
முதலமைச்சருக்கு
நூற்றுக்கு நூறு” இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கொரோனா 2 அலை காரணமாக மத்திய அரசு +2 சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களில் +2 தேர்வு ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் +2 தேர்வை நடத்துவது தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்பட்டன. இதற்கு கல்வியாளர்கள், பொதுமக்கள் என பலரும் தேர்வு நடத்துவதற்கு ஆதரவாகவும், மறுத்தும் கருத்துகளை தெரிவித்தனர்.. இந்த நிலையில் நேற்று தமிழக அரசு +2 தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்