Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கொரோனா காலத்திலும் யோகா நம்பிக்கை ஒளியாக இருக்கிறது - பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்புரை ஆற்றிய பிரதமர் மோடி உலக மக்கள் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திப்பதாக கூறினார்.  

இன்று இந்தியா உட்பட உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி உள்ளிட்ட இடங்களில் மத்திய அமைச்சர்கள் தங்களது வீடுகளில் யோகாசனங்களை செய்கின்றனர். சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

‘’நோய் நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்’’ என்ற திருக்குறளை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் யோகா நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது. யோகா செய்யவேண்டும் என்ற உத்வேகம் மட்டும் இன்னும் குறையவில்லை. ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன் என்று கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்