Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கரும்பூஞ்சை தடுப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கரும்பூஞ்சை பாதிப்புக்கான அறிகுறிகள் தெரிந்தால் அலட்சியப்படுத்தக்கூடாது என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கரும்பூஞ்சை நோய் சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் 6 வாரங்கள் வரை கவனிக்க வேண்டிய அம்சங்களாக இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும், தூசி மிகுந்த இடங்களுக்குச் செல்லக்கூடாது, ரத்த சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும். சர்க்கரை அளவு 180க்கு மேல் இருப்பது, வாந்தி, வயிற்றுவலி, தொடர் தாகம், சிறுநீர் போவது அதிகரித்தல், குழப்பம் இருக்கிறதா என கவனிக்க வேண்டும்.

முகத்தின் ஒருபகுதியில் வீக்கம், மூக்கில் ஒரு துவாரத்தில் தொடர்ச்சியாக அடைப்பு, நெற்றியில் கடும்வலி, கண்சிவத்தல், இரட்டைப்பார்வை, வாய்ப்புண், பல் வலி அல்லது பல் வலுவிழத்தல், கருப்பு அல்லது பழுப்பு நிற திரவம் மூக்கில் இருந்து வடிதல் இருந்தால் மருத்துவமனையை அணுக வேண்டும். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்போடெரிசின் பி டியோக்ஸிகொலேட் , லிபோசோமல், ஆம்போடெரிசின் பி போன்ற மருந்துகளை சிகிச்சைக்கு பயன்படுத்தலாம். ஆம்போடெரிசின் வகை மருந்துகளை ஏற்றுக்கொள்ளாத நோயாளிகளுக்கு பொசகோனசோல் , இஸவுகோனசோல் மருந்துகளை பயன்படுத்தலாம் என்று வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டுள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்