Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்தபின் 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசுங்கள் -ராகுல் காந்தி

'நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி கிடைத்தபிறகு 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் உரையாற்றுங்கள்' என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
 
2014-இல் பிரதமராக பதவியேற்றதில் இருந்து நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ஆல் இந்தியா ரேடியோ மூலமாக 'மனதின் குரல்' என்ற நிகழ்ச்சியின் வாயிலாக நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். இந்த மாதத்திற்கான 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி பேசினார். இது அவரின் 78-வது மனதின் குரல் நிகழ்ச்சியாகும்.
 
இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் 'மன் கி பாத்' நிகழ்ச்சியை குறிப்பிட்டு, கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் விகிதம் குறித்த ஒரு வரைபடத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், ''நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் முதலில் தடுப்பூசி கிடைக்கச் செய்யுங்கள். அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்தபிறகு 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் உரையாற்றுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்