சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு அதிக வெற்றிகளைப் பெற்றுத்தந்த விளையாட்டு கபடி.
சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கபடி தோன்றியதாகக் கூறப்படுகிறது. மகாபாரத காலத்தில் கபடி விளையாட்டு இருந்ததாகவும், பிற்காலத்தில் கவுதம புத்தர் தனது சிறுவயதில் கபடி விளையாடி இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்காலத்தில் ராஜகுமாரர்கள் தங்கள் உடல் வலுவைக் காட்டி, இளவரசிகளைக் கவர்ந்த முக்கிய விளையாட்டுகளில் ஒன்றாக கபடி கருதப்படுகிறது. அதே நேரத்தில் கபடி விளையாட்டு ஈரானில் தொடங்கியதாக மற்றொரு பிரிவினர் கூறுகின்றனர்.
0 கருத்துகள்