Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'

'வறியவர்களின் வலி தீர, எளியவர்களின் இருள் நீங்க, கரம் கொடுப்போம், கரை சேர்ப்போம்...' என்கிற சமூக அக்கறை மிகுந்த முனைப்புடன் 'துளிர்க்கும் நம்பிக்கை' என்ற பெயரில் உதவி மையத்தை தொடங்கியுள்ளது 'புதிய தலைமுறை'. கொரோனா பேரிடர் காலத்தில் உதவி தேவைப்படுபவர்களையும், உதவ முன்வருபவர்களையும் இணைக்கும் பாலமாக 'புதிய தலைமுறை' இந்த முன்னெடுப்பை தொடங்கியுள்ளது.

உதவி நாடுவோர், உதவ முன்வருவோர் 9150734555, 9150737555 எண்களிலும், pthelpline@newgenmedia.in என்கிற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். 

image

'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்தின் திட்டங்கள்:

  • கொரோனா தொடர்பான சிகிச்சை உதவிகள்
  • பெற்றோர்களை இழந்த குழந்தைகள்
  • ஆக்சிஜன் செறிவூட்டிகள் பெற்றுக் கொடுத்தல்
  • சிறையில் இருக்கும் கைதிகளுடைய குழந்தைகளின் தேவைகள்
  • ஆதரவற்றோருக்கான கொரோனா கால தேவைகள்
  • காப்பீடு சார்ந்த தகவல் உதவி
  • ஏழை மாணவர்களின் ஆன்லைன் கல்விக்கான தேவையான உபகரணங்கள் மற்றும் பாடப்புத்தகங்கள்
  • உணவு தேவை - சாலையோரம் வசிப்போர், கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்காக
  • அவசியமின்றி, தேவைக்கு அதிகமாக வைத்திருக்கும் மருந்துகள்
  • வேலைவாய்ப்பு தகவல்கள்
  • திருநங்கைகளுக்கு தேவையான உதவிகள்
  • மாற்றுத்திறனாளிகள் - முதியோருக்கு தேவையான உதவிகள்
  • மளிகைப் பொருட்கள் தேவை
  • வாகன மற்றும் ஆம்புலன்ஸ் தேவை
  • கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய உதவி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்