Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

முன்னாள் இந்தியக் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் குத்துச்சண்டைப் போட்டியை பிரபலப்படுத்தியதில் சிங்குக்கு முக்கியப் பங்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த டிங்கோ சிங், செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அவருக்கு வயது 42. கடந்த வருடம் மே மாதம் கரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் விரைவில் அதிலிருந்து டிங்கோ சிங் மீண்டார். கல்லீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக கடந்த வருடம் இம்பாலிலிருந்து விமானம் மூலமாக டெல்லிக்கு வந்து சென்றார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்