Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மகாராஷ்டிரா சட்டசபையில் தொடர் அமளி: பாஜகவின் 12 எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இருந்து பாஜகவைச் சேர்ந்த 12 எம்.எல்.ஏக்கள் ஓராண்டிற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சட்டப்பேரவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் பாஜக எம்.எல்.ஏக்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். சபாநாயகர் இல்லாத நிலையில் தற்காலிக சபாநாயகரான ஜாதவ் சட்டமன்றக் கூட்டத்தை நடத்தி வந்தார்.

பாஜக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து பாஜக எம்.எல்.ஏக்களான பராக் அலவானி, ராம் சத்புட், சஞ்சய் குட், ஆஷிஷ் ஷெலார், அபிமன்யு பவார், கிரிஷ் மகாஜன், அதுல் பட்கல்கர், ஷிரிஷ் பிம்பிள், ஜெய்குமார் ராவல், யோகேஷ் சாகர், நாராயண் குச்சே, மற்றும் கீர்த்திகுமார் பகடி ஆகிய 12 பேரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையில் பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்