மேற்கிந்தியத்தீவுகள் அணியில் உள்ள வீரர்கள் அல்லாத ஊழியருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்ததையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி தொடங்க இருந்த சில நிமிடங்களுக்கு முன் திடீரென நிறுத்தப்பட்டது.
இதனால், இரு அணி வீரர்களும் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு கரோனா பரிசோதனையும் நடத்தப்பட உள்ளது. இதனால், அடுத்துவரும் ஒருநாள் போட்டிகள் நடக்குமா அல்லது தள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
0 கருத்துகள்