Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தமிழகம் வந்தடைந்த 6 லட்சம் தடுப்பூசிகள்: 2 நாட்களுக்குப் பிறகு வழக்கம்போல் முகாம்கள்

தமிழ்நாட்டிற்கு மேலும் 6 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் இரவில் வந்தடைந்தன. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்களுக்குப் பிறகு தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளன.

தமிழகத்திற்கு ஜூலை மாதத்தில் 71 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. கடந்த 2 தினங்களாக தடுப்பூசி அனுப்பப்படாத நிலையில், சென்னை உட்பட பல மாவட்டங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறவில்லை.

இந்த நிலையில், புனேவில் இருந்து நேற்றிரவு 9 மணிக்கு 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. அதனைத் தொடர்ந்து தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன. மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் கிடைத்துள்ளதால், சென்னையில் இன்று தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்