ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற மனஅழுத் தத்துடன் விளையாட வேண்டாம். முழு திறமையை வெளிப்படுத்துங்கள். அது போதும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை கூறியுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ வில் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியாவில் இருந்து 126 வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்திய அணியின் முதல் குழு வரும் 17-ம் தேதி டோக்கியோ புறப்படுகிறது.
0 கருத்துகள்