Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஒலிம்பிக்கில் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்ற மனஅழுத்தம் வேண்டாம்; முழு திறமையை வெளிப்படுத்துங்கள்: வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற மனஅழுத் தத்துடன் விளையாட வேண்டாம். முழு திறமையை வெளிப்படுத்துங்கள். அது போதும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை கூறியுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ வில் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியாவில் இருந்து 126 வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்திய அணியின் முதல் குழு வரும் 17-ம் தேதி டோக்கியோ புறப்படுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்