டோக்யோ ஒலிம்பிக்கின் பாட்மிண்டன் மகளிர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து அசத்தல் வெற்றிப் பெற்றார்.
இஸ்ரேலின் போலிகர்போவை முதல் சுற்றில் எதிர்கொண்ட பிவி சிந்து தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினார். இதனையடுத்து முதல் செட்டை 21-7 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 21-10 என்ற கணக்கிலும் வென்று போலிகர்போவை வென்று அடுத்த சுற்றுக்கு தகுதிப் பெற்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்