நம் வெற்றி தள்ளிப்போடப்பட்டிருக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காலத்தையும், காட்சிகளையும் மாற்றும் சக்தி நமக்குண்டு! நம் வெற்றி தள்ளிப்போடப்பட்டிருக்கிறது; யாராலும் அதனை மொத்தமாக தடுத்துவிட முடியாது. புதிய பொலிவோடும், வலிவோடும் முன்பைவிட வேகமாக செயல்படுவோம்! 9 மாவட்ட உள்ளாட்சித்தேர்தல்- மாநகராட்சி, நகராட்சி தேர்தல்களுக்குத் தயாராவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “நிறைவேற்ற் முடியாத வாக்குறுதிகளை தந்துவிட்டு இரண்டே மாதங்களில் திமுக தடுமாறி நிற்பதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பெட்ரோல்-டீசலுக்கான வரி, நீட் தேர்வு, 7 தமிழர் விடுதலை, மின்வெட்டு என பலவற்றில் விடியல் தரப்போவதாக சொன்னவர்கள் தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாக இருளில் தள்ளிவிட வேலை பார்த்து வருகின்றனர்.
காலத்தையும், காட்சிகளையும் மாற்றும் சக்தி நமக்குண்டு!
— TTV Dhinakaran (@TTVDhinakaran) July 9, 2021
நம் வெற்றி தள்ளிப்போடப்பட்டிருக்கிறது; யாராலும் அதனை மொத்தமாக தடுத்துவிட முடியாது! -
புதிய பொலிவோடும், வலிவோடும் முன்பைவிட வேகமாக செயல்படுவோம்!
9 மாவட்ட உள்ளாட்சித்தேர்தல்- மாநகராட்சி, நகராட்சி தேர்தல்களுக்குத் தயாராவோம்! pic.twitter.com/pk4s1Zrd59
இன்னொரு புறம், கடந்த 4 ஆண்டுகளாக ஆட்டம் போட்ட தமிழின துரோகிகள் அடுத்து என்னாகுமோ, எங்கே போகப்போகிறோமோ என்று அஞ்சி நடுங்கி கொண்டிருப்பது கண்கூடாகவே தெரிகிறது. இவர்களிடம் இருந்து தமிழ்நாட்டி மீட்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து, ‘ஊக்கத்தை கைவிடாதே; அதுவே வெற்றியின் முதல் படிகட்டு’ என்ற அண்ணாவின் பொன்மொழியை நினைவில் வைத்து துளியும் தளர்வின்றி உற்சாகமாக இயக்குவோம். நம் லட்சியப்பயணத்தில் வென்றே தீருவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்