Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கர்நாடகாவில் புதிய அணை: கட்டுமானப் பணியில் தமிழக தொழிலாளர்கள் - புதிய தகவல்கள்

மார்கண்டேய நதியின் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கான கட்டுமானப் பொருட்கள் தமிழ்நாட்டில் இருந்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக அரசு யார்கோல் எனும் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் முக்கிய துணை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே, 40 மீட்டர் உயரம், 414 மீட்டர் நீளத்தில் அணையை கட்டி முடித்துள்ளது. இந்த புதிய அணையால் கிருஷ்ணகிரியில் படேதலாவ் ஏரிக்கும், கே.ஆர்.பி.அணைக்கும் நீர்வரத்து குறையும். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. தவிர தென்பெண்ணை ஆற்றினால் பயனடையும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
image
இதற்கிடையில், மார்கண்டேய நதியின் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கான கட்டுமானப் பொருட்கள் தமிழ்நாட்டில் இருந்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அணை கட்டுவதற்கு ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒப்பந்தம் போட்டிருந்தது. கிருஷ்ணகிரியை சார்ந்த 25 கட்டுமான நிறுவனங்கள் துணை ஒப்பந்ததாரர்களாக பல்வேறு பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் ஓசூர், தளி, கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்து மணல், ஜல்லிகள், சிமெண்ட், இரும்பு கம்பிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
சேலத்தை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனம், அணை கட்டுமான பணிக்கு எம்.சாண்ட் மணலை சப்ளை செய்ததாக கூறப்படுகிறது. அணைக் கட்டும் பணிக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்டடத் தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்