இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருக்கும் ரிஷப் பந்த்துக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் இந்திய அணியுடன் டர்ஹம் நகருக்குப் பயணப்பட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உறுதி செய்திருக்கும் பிசிசிஐ அதிகாரி ஒருவர், கடந்த 8 நாட்களாக பந்த் தனிமையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது வரை அவருக்கு அறிகுறிகள் இல்லாத தொற்றே இருப்பதாகவும் கூறியுள்ளார். ரிஷப் பந்த் மீண்டும் எப்போது அணியினருடன் இணைவார் என்பது குறித்துச் சொல்லப்படவில்லை.
0 கருத்துகள்