Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வாகன ரோந்து சோதனையின் போது இளைஞர் திடீரென தற்கொலை - திருமுல்லைவாயல் அருகே அதிர்ச்சி

சென்னையில் போலீசின் வாகன தணிக்கையின்போது இளைஞர் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருமுல்லைவாயில் அருகே அயப்பாக்கத்தில் பாக்கியராஜன் என்ற இளைஞர் மது அருந்திக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது வாகன தணிக்கையின்போது ரோந்து வந்த போலீசார் பாக்கியராஜனை அழைத்து விசாரித்திருக்கின்றனர். விசாரித்துக் கொண்டிருக்கும்போதே பாட்டிலை உடைத்த பாக்கியராஜன் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். இதனால், அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த திடீர் நிகழ்வால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முற்பட்டிருக்கின்றனர். ஆனால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் பாக்கியராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்போது பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்