கோபா அமெரிக்காவில் 4 முறை இறுதிப்போட்டியில் தோல்வி, மிகப்பெரிய போட்டிகளில் தொடக்கத்திலேயே வெளியேறியது, தேசிய அணியில் இருந்து ஓய்வு அறிவிப்பு என பல கட்ட மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்த லயோனல் மெஸ்ஸி இறுதியாக தனது அர்ஜென்டினா அணிக்கு 28 ஆண்டுகளுக்குப்பின் கோபா அமெரி்க்கா கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
தான்பிறந்த மண்ணின் உரிமையான அர்ஜன்டினா அணிக்கு ஒரு தேசிய அளவிலான கோப்பையை பெற்றுத் தரமுடியவில்லையே எனும் இயலாமை லயோனா மெஸ்ஸியின் மனதை நீண்டகாலமாக ரணமாக அழுத்திவந்தது. இதை பலமுறை அவரே வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.
0 கருத்துகள்