Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆந்திரா: கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து 1,000 கன அடி நீர் திறப்பு 

ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து ஆயிரம் கன அடி நீர் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கொசஸ்தலை ஆற்றில் நான்கு தரைப்பாலங்களை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது.

கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் உள்ள கீழ் கல்பட்டறை, செராக்காபேட்டை, நெடியம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், ஆபத்தை உணராமல் சிலர் தரைப்பாலத்தை கடந்து செல்கின்றனர். அசம்பாவிதம் தடுக்கும் வகையில், காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனைப்படிக்க...நீலகிரி: புலி நடமாட்டத்தால் வீடுகளில் முடங்கிய மக்கள் - உணவுப்பொருட்கள் வழங்கும் அரசு 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்