Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

யெஸ்.பாலபாரதிக்கு பால சாஹித்ய புரஸ்கார் விருது - சாகித்ய அகாடமி அமைப்பு அறிவிப்பு

தமிழில் சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான ’பால சாகித்ய புரஸ்கார் விருது’ எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

’மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற நாவலுக்காக இவ்விருதை யெஸ்.பாலபாரதிக்கு சாகித்ய அகாடமி அறிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான இவ்விருதை யெஸ்.பாலபாரதிக்கு வழங்க கமலவேலன், ருத்ர துளசிதாஸ், யூமா வாசுகி ஆகியோர் கொண்ட நடுவர் குழு பரிந்துரைத்துள்ளது. தாமிர பதக்கம், 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை ஆகியவை யெஸ்.பாலபாரதிக்கு வழங்கப்பட உள்ளது. புதையல் டைரி, துலக்கம், அன்பான பெற்றோரே, சந்துருவுக்கு என்னாச்சு, பூமிக்கு அடியில் ஒரு மர்மம் ஆகிய குழந்தை நூல்களை யெஸ்.பாலபாரதி எழுதியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்