Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி: வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பருவமழை தீவிரம் : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்பிருப்பதாகவும்; ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், சில இடங்களில் மட்டுமே மழைக்கு வாய்ப்பு இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

image

முன்னதாக தோகைமலை, ஏத்தாப்பூரில் தலா 4 செ.மீ. மழை மற்றும் நாமக்கல், பென்னகரம், கரியாப்பட்டி, நாகையில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்