கோயில்களில் மொட்டை அடிக்க இனி கட்டணம் வசூலிக்கப்படாது என பேரவையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருக்கிறார்.
தமிழக கோயில்களில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக செய்யும் முடிக்காணிக்கைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது எனவும், அதற்கான கட்டணத்தை பணியில் ஈடுபடுபவர்களுக்கு கோயில் நிர்வாகமே வழங்கும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும், மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் கோயில்களில் நடைபெறும் திருமணத்திற்கு கட்டணம் ரத்து செய்யப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருக்கிறார்.
ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் காவிரி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்