வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.15 உயர்ந்துள்ளது.
சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 900 என விற்கப்பட்டு வந்த நிலையில், ரூ.15.50 உயர்ந்து தற்போது ரூ. 915.50 என்றாகியுள்ளது. முன்னதாக கடந்த ஆக. 17 -ம் தேதி சமையல் எரிவாயு, 25 ரூபாய் உயர்த்தப்பட்டிருந்தது. இதனால் சென்னையில் சிலிண்டர் விலை 875 ரூபாய் 50 காசாக விற்கப்பட்டது.
தொடர்புடைய செய்தி: 8 மாதத்தில் 165 ரூபாய் விலை ஏற்றம் - சாமானியர்களை சோதிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை
அதன்பின் செப்.1 ம் தேதி, மேலும் 25 ரூபாய் உயர்ந்து 900- ஐ கடந்தது. இப்படி கடந்த ஓராண்டில் மட்டும் 285 ரூபாய் அதிகரித்திருந்த நிலையில், தற்போது இன்னும் 15 ரூபாய் உயர்ந்து, ரூ.915 என்றாகியுள்ளது. இதன்மூலம் கடந்த ஓராண்டில் சிலிண்டர் விலை ரூ.300 உயர்ந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்