ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு மோதுகிறது.
லீக் சுற்றில் 20 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த டெல்லி அணி தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தி வருகிறது. எனினும் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி பந்தில் வெற்றியை தவறவிட்டிருந்தது. அதேவேளையில் 18 புள்ளிகளுடன் 2-ம் இடம் பிடித்திருந்த சென்னை அணி தனது கடைசி 3 லீக் ஆட்டங்களிலும் தோல்வியடைந்த நிலையில் பிளே ஆஃப் சுற்றை சந்திக்கிறது.
0 கருத்துகள்