தமிழகத்தில் இன்று கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர் உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்டுகளுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.
அடுத்த 24 மணிநேரத்தில் அந்தமான் மற்றும் அதனையொட்டிய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்