Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உ.பி.யில் பேருந்து - லாரி நேருக்குநேர் மோதி விபத்து: 9 பேர் உயிரிழப்பு

உத்தரப் பிரதேசத்தில் பேருந்தும், லாரியும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 
டெல்லியில் இருந்து லக்னோ வழியாக உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் நகரை நோக்கி பேருந்து ஒன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், பாரபங்கி நகரில் பாபுரி கிராமத்தில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் பேருந்து திடீரென எதிரே வந்த லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
image
இந்த சம்பவத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடும் அறிவித்து உள்ளார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்