Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தோனி இந்திய அணிக்கு ஆலோசகராக வந்தது வீரர்களின் நம்பிக்கைக்கு ஊக்கமளிக்கும்: விராட் கோலி உற்சாகம்

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு இந்திய அணிக்கு ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டிருப்பது அணியில் உள்ள வீரர்களின் நம்பிக்கைக்கு ஊக்கம் அளிக்கும் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் முறைப்படி இன்று தொடங்கி, நவம்பர் 14ம் தேதி வரை நடக்கின்றன. இதில் 24ம் தேதி நடக்கும் முதல் பிரதானச் சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற தோனி, டி20 உலகக் கோப்பைப் போட்டிக்காக மட்டும் இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். தோனியின் அனுபவம், தலைமைப் பண்பு, முடிவெடுக்கும் திறமை போன்றவை வீரர்களுக்கு சரியான விதத்தில் துணை புரியும் என்பதால், இந்த முடிவை பிசிசிஐ எடுத்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்