Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“புதுச்சேரியில் இன்று மெகா தடுப்பூசி முகாம்” - துணைநிலை ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி மாநிலத்தை 100 சதவீத தடுப்பூசி பெற்ற மாநிலமாக உருவாக்க, இன்று அங்கு மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவித்துள்ளார். மேலும் நவம்பர் முதல் வாரத்தில் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்க இருப்பதாகவும் பேட்டியளித்துள்ளார் அவர்.

புதுச்சேரி மாநிலத்தை, ‘100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலம்’ என உருவாக்க புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் தலைமையில் ஆளுநர் மாளிகையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் அவருடன் சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், கல்வித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டிருந்தனர்.

image

கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “புதுச்சேரி மாநிலத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக உருவாக்க அரசு எடுத்த துரித நடவடிக்கையில் இன்னும் இரண்டு லட்சம் பேர் தடுப்பூசி போடவுள்ளது. அவர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. மூன்றாவது அலை வருமா வராதா என்ற நிலையில் இரண்டாம் அலை இன்னும் முடிவு பெறவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுவதால் தடுப்பூசி ஒன்றே இதற்கு தீர்வாகும்” என்றார்.

தொடர்புடைய செய்தி: 6-வது கட்ட கொரோனா தடுப்பூசி மெகா முகாம் தொடங்கியது: 50 ஆயிரம் மையங்களில் ஏற்பாடு

மேலும் பேசுகையில், “புதுச்சேரி மாநிலத்தில் நவம்பர் முதல் வாரத்தில் ஒன்று முதல் 8 ஆம் வகுப்புகள் தொடங்கப்பட, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகின்றது. 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுள்ளதால் அரசு பாதுகாப்பு விஷயத்தில் கவனமாக இருக்கிறது” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்