ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக் கோப்பை போட்டி முடிந்தபின், இந்திய அணிக்கு முழு நேரப் பயிற்சியாளராகப் பதவி ஏற்க தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் ராகுல் திராவிட் சம்மதித்துள்ளார்.
முதலில் புதிய பயிற்சியாளர் நியமிக்கும் வரை அல்லது தென் ஆப்பிரிக்கத் தொடர் வரை பயிற்சியாளராக மட்டும் இருக்கவே திராவிட் சம்மதித்தார். ஆனால், பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா கேட்டுக்கொண்டதை அடுத்து, முழு நேரப் பயிற்சியாளராக திராவிட் மாறுகிறார்.
0 கருத்துகள்