Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க வேண்டும்: தீச்சட்டி ஏந்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

கோயில்களில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னை காளிகாம்பாள் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், தஞ்சாவூர் பெரியக்கோவில் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதிலுமுள்ள பிரசித்திப்பெற்ற 12 கோயில்களின் முன்பு இந்த போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை காளிகாம்பாள் கோயில் முன்பு நடந்த போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கோயமுத்தூர் கோனியம்மன் கோயில் முன்பு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.  

சில இடங்களில் பாஜகவை சேர்ந்த பெண்கள் தீச்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர். 

இதனைப்படிக்க...மதுரை: நன்னடத்தை பத்திரம் எழுதிக் கொடுத்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்