மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படியே வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோயில்கள் மூடப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மீண்டும் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, ''மற்ற நாட்களில் கோவில்கள் திறக்கப்படாமல் இருந்தால் என் கவனத்திற்கு கொண்டுவாருங்கள்; நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் படியே கோயில்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தெய்வங்களுக்கு செய்யப்படும் பூஜைகளில் எந்த மாற்றமும் இல்லை. கொரோனா அபாயம் நீங்கியவுடன் முதல் நடவடிக்கையாக கோயில்கள் திறக்கப்படும்'' என தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்