அதிமுக பொன்விழாவையொட்டி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக பொன்விழாவையொட்டி சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினர். அதிமுகவின் பொன்விழா ஆண்டு சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்