Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

காஷ்மீரில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல்

காஷ்மீரில் ஒரு மணி நேரத்துக்குள் நடைபெற்ற 3 பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்களில் மூவர் கொல்லப்பட்டனர்.

இக்பால் பார்க் என்ற இடத்தில் மருந்து கடை நடத்தி வரும் 68 வயதான மாக்கான் லால் பிந்த்ரோ , சுமார் 7 மணி அளவில், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து சிறிது நேரத்தில் பீகாரைச் சேர்ந்த சாலையோர கடை வியாபாரி வீரேந்திர பாஸ்வானையும், முகம்மது சாஃபி என்பவரையும் பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்தனர்.

தடை செய்யப்பட்ட லக்ஷர் இ தொய்பா அமைப்புடன் தொடர்புடைய தி ரெசிஸ்டென்ஸ் ப்ரண்ட் என்ற அமைப்பினர் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என பாதுகாப்புப்படையினர் சந்தேக்கின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்