Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தோனிக்குத்தான் முதல் வாய்ப்பு; கப்பலுக்கு கேப்டன் அவசியம்: சிஎஸ்கே நிர்வாகம் சூசகம்


2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் தக்கவைக்கும் கார்டு முதன்முதலில் தோனிக்காகவே பயன்படுத்தப்படும் என்று சிஎஸ்கே அணியின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் சமீபத்தில் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி " நீங்கள் என்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவதைப் பார்க்கலாம். ரசிகர்கள் எனது கடைசி ஆட்டத்தைப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும். அப்படித்தான் விடைபெற வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்